விஷ கஞ்சியால் ஒரே குடும்பத்தின் 13 பேர் பலி
விண்ட்ஹோக், நமீபியாவில் விஷமாக மாறிய கஞ்சி குடித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்ரிக்க நாடான நமீபியாவில் உள்ள காவாங்கோ என்ற கிராமத்தில் 20 பேர் உள்ள குடும்பத்தினர் வசித்து வந்தனர். இவர்கள், நேற்று கஞ்சி உணவுடன், வீட்டில் தயாரித்த மதுபானத்தை கலந்து சாப்பிட்டனர்.
சிறிது நேரத்தில் இவர்கள் ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர்களை பரிசோதித்த டாக்டர்கள், 13 பேர் உயிரிழந்ததாகவும், நான்கு பேர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நமீபிய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கஞ்சி உணவுடன், வீட்டில் தயாரித்த பீரை கலந்து குடித்துள்ளனர்.
இது, நொதித்து பல நாட்கள் ஆகியிருந்ததால் விஷமாக மாறியிருக்க கூடும். இதை, 2 வயது சிறுவர்கள் முதல் 33 வயது பெரியவர்கள் வரை சாப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்.
இவ்வாறு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ட்ஹோக், நமீபியாவில் விஷமாக மாறிய கஞ்சி குடித்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆப்ரிக்க நாடான நமீபியாவில் உள்ள காவாங்கோ என்ற கிராமத்தில் 20 பேர் உள்ள