10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்; போராட்டத்திற்கு தயாராகிறது பா.ஜ.,

தினமலர்  தினமலர்
10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம்; போராட்டத்திற்கு தயாராகிறது பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த, பா.ஜ., முடிவு செய்துள்ளது.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும், அரசியல் சாசன சட்டத் திருத்தத்தை, 2019ல் மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்தது. இதற்கு பா.ஜ., மட்டுமல்லாது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆதரவளித்தன.

இதை எதிர்த்து, தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், நபர்களும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், '10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும்' என தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறு சீராய்வு மனுக்களையும், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை: பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான, 10 சதவீத இட ஒதுக்கீட்டை, தமிழகத்தில் அமல்படுத்த வலியுறுத்தி, பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டங்கள் நடத்த, பா.ஜ., முடிவு

மூலக்கதை