செந்தில்பாலாஜி தம்பி நேரில் ஆஜராக 'சம்மன்'

தினமலர்  தினமலர்
செந்தில்பாலாஜி தம்பி நேரில் ஆஜராக சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


கரூர்: சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பிக்கு நெருக்கமான அரசு கான்ட்ராக்டரின் அலுவலகத்திற்கு, 'சீல்' வைத்த வருமான வரித்துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியின் தம்பி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக, அவரது வீட்டில் 'சம்மன்' ஒட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ளது. கடந்த, 26ல் வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்த சென்றனர்.

அப்போது, வீடு பூட்டப்பட்டிருந்தது. தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினர். சோதனை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், அசோக்குமார் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவியது. இதனால் சில தி.மு.க., நிர்வாகிகள், உள்ளூர் நிருபர்களை தொடர்பு கொண்ட அசோக்குமார், 'நான் சென்னையில் இருக்கிறேன்' என, தகவல் தெரிவித்துள்ளார்.

கரூர்: சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்காத, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தம்பிக்கு நெருக்கமான அரசு கான்ட்ராக்டரின் அலுவலகத்திற்கு, 'சீல்' வைத்த வருமான வரித்துறை அதிகாரிகள்,

மூலக்கதை