'மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2026 மார்ச்சில் முடியும்'
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளால், உலக அரங்கில் இந்தியர்களுக்கு பெரும் மரியாதை கிடைத்திருப்பதாக மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு ஒன்பது ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியை மோடி வழங்கியுள்ளார். வேலையின்மை, வறுமை ஒழிப்பில் பெரும் வெற்றி அடைந்துள்ளோம்.
மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளே, கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் திணறியபோது, மோடி அதனை திறமையாக கையாண்டார்.
உலக அளவில் நடக்கும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் 40 சதவீதம் இந்தியாவில் நடக்கிறது.
''ஜப்பானில் புல்லட் ரயில் டிக்கெட் கட்டணம் அதிகம் என்பதால் தான் அதை, முதல்வர் ஸ்டாலின் வெளியிடவில்லை,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.மோடி அரசின் ஒன்பது ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கம் அளிக்க, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் அளித்த பேட்டி:ஜப்பான் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் புல்லட் ரயிலில் பயணம் செய்த படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால், அதற்கான டிக்கெட்டை வெளியிடவில்லை. ஜப்பான் புல்லட் ரயிலில், சாதாரண மக்கள் பயணம் செய்ய முடியாத அளவுக்கு கட்டணம் அதிகம். அதனால்தான், புல்லட் ரயில் டிக்கெட்டை, ஸ்டாலின் வெளியிடவில்லை.டில்லியில் போராட்டம் நடத்தும் மல்யுத்த வீராங்கனைகள், தாங்கள் கூறிய குற்றச்சாட்டை மட்டும் அடிப்படையாக கொண்டு, மல்யுத்த சங்க தலைவரை கைது செய்ய வேண்டும். அதன் பிறகு தான் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம் என்கின்றனர். தாங்கள் கூறிய புகார்களுக்கு அவர்கள் எவ்வித ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை. புகார் அளித்த உடனேயே கைது செய்ய வேண்டும் என்று நிர்பந்திப்பது, சரியான அணுகுமுறை அல்ல.மோடி அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க, வரும் மாதத்தில் மாபெரும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்த இருக்கிறோம். பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும், வீடு வீடாகச் சென்று மோடி அரசின் சாதனை எடுத்துச் சொல்வர்.இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனைகளால், உலக அரங்கில் இந்தியர்களுக்கு பெரும் மரியாதை கிடைத்திருப்பதாக மத்திய அறிவியல், தொழில் நுட்பத்துறை