நேரு - மகேஷ் மோதல்: திருச்சி தி.மு.க.,வில் தீவிரம்

தினமலர்  தினமலர்
நேரு  மகேஷ் மோதல்: திருச்சி தி.மு.க.,வில் தீவிரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


திருச்சி மாவட்ட தி.மு.க.,வில், அமைச்சர்கள் நேரு, மகேஷ் மற்றும் எம்.பி., சிவா ஆகியோரின் ஆதரவாளர்கள், தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். கருணாநிதி காலத்தில் இருந்தே, ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட தி.மு.க.,வை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர், நேரு.

தற்போது, அமைச்சர் மகேஷின் வளர்ச்சியும், ஆதிக்கமும், அவருக்கு எதிராக திரும்பியுள்ளது. கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு மிக்கவராக, மகேஷ் இருப்பதால், திருச்சி தி.மு.க.,வில், அவருக்கென ஆதரவு வட்டம் உருவாகி உள்ளது.

இதனால், நேரு தயவால் 'சீட்' வாங்கி, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்கள் கூட, தற்போது அவரது வட்டத்தில் இருந்து வெளியேறி, மகேஷிடம் கைகோர்த்துள்ளனர். அதனால், நேருவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட யாரையும், அரசு விழாக்களுக்கு அழைப்பதில்லை.

- நமது நிருபர் -

திருச்சி மாவட்ட தி.மு.க.,வில், அமைச்சர்கள் நேரு, மகேஷ் மற்றும் எம்.பி., சிவா ஆகியோரின் ஆதரவாளர்கள், தனித்தனி கோஷ்டிகளாக செயல்படுகின்றனர். கருணாநிதி காலத்தில் இருந்தே, ஒட்டுமொத்த

மூலக்கதை