4வது சிவிங்கி புலி குட்டி நலமுடன் உள்ளதாக தகவல்

தினமலர்  தினமலர்
4வது சிவிங்கி புலி குட்டி நலமுடன் உள்ளதாக தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

போபால்-'மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று சிவிங்கிப் புலி குட்டிகள் சமீபத்தில் இறந்த நிலையில், நான்காவது குட்டியின் உடல்நிலை சீராக உள்ளது' என, குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.

ம.பி.,யில் உள்ள கார்கோனே மாவட்டத்தில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை அடித்துக் கொல்லப் பட்டது. இங்கு, செயின்பூர் கிராமத்தில் வயலுக்குச் சென்ற உமேஷ் தவார் என்பவரை சிறுத்தை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதையடுத்து, சிறுத்தையை விரட்டிச் சென்ற பொதுமக்கள், கட்டை மற்றும் கற்களால் அதைத் தாக்கினர். இதில் சிறுத்தை உயிரிழந்தது. 'சிறுத்தையின் உடலில் பலத்த காயங்கள் உள்ளன. சிறுத்தை தாக்கப்பட்டு இறந்தது உறுதியானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என வனத் துறை அதிகாரி கூறினார்.



போபால்-'மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மூன்று சிவிங்கிப் புலி குட்டிகள் சமீபத்தில் இறந்த நிலையில், நான்காவது குட்டியின் உடல்நிலை சீராக

மூலக்கதை