கர்நாடகாவில் ' ஜெய் பாரத்' யாத்திரை: ராகுல் திட்டம்

புதுடில்லி: முன்னாள் காங்.எம்.பி. ராகுல் கர்நாடக மாநிலம் முழுதும் 'ஜெய் பாரத்' யாத்திரை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனைவிதித்தது. இதையடுத்து அவரது லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக சட்டசபைக்கு மே.10ல் தேர்தல் நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் காங். வெற்றி வியூகம் வகுத்திட திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் எம்.பி.யான ராகுல் வரும் 09-ம் தேதி முதல் கர்நாடகாவில் கோலார் மாவட்டத்திலிருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை துவங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புதுடில்லி: முன்னாள் காங்.எம்.பி. ராகுல் கர்நாடக மாநிலம் முழுதும் 'ஜெய் பாரத்' யாத்திரை துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி சமூகம் குறித்த அவமதிப்பு வழக்கில் சூரத் கோர்ட்
மூலக்கதை
