இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியை காண குவித்த ரசிகர்கள்!

தினகரன்  தினகரன்
இந்தியா  ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியை காண குவித்த ரசிகர்கள்!

சென்னை: இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டியை காண சேப்பாக்கத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறவுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ள நிலையில் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியை காண ஏராளமான கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியை காண இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மைதானத்தின் முன் குவிந்துள்ளனர். 4 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ள இந்த போட்டியை காண மிகுந்த உற்சாகத்துடன் ரசிகர்கள் டிக்கெட்டுடன் அதிகாலை முதலே வரிசையில் நின்று காத்திருக்கின்றனர். தொடரின் இறுதிப்போட்டி என்பதால் தொடர கைப்பற்ற இரு அணிகளும் வரிந்து காட்டும் என்பதால் சென்னையில் இன்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து காத்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மூலக்கதை