இந்தியாவுக்கு 20 ஆண்டுகளில் 31 ஆயிரம் விமானிகள் தேவை

தினமலர்  தினமலர்
இந்தியாவுக்கு 20 ஆண்டுகளில் 31 ஆயிரம் விமானிகள் தேவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


மும்பை, 'இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில், 31 ஆயிரம் விமானிகள், 26 ஆயிரம் மெக்கானிக்குகள் தேவைப்படுவர்' என, போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்தா குறிப்பிட்டார்.

அமெரிக்காவைச் சேர்ந்த, 'போயிங்' விமான தயாரிப்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான, போயிங் இந்தியாவின் தலைவர் சலீல் குப்தா, மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.

அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட பின், இந்தியாவில் விமான போக்குவரத்து துறை பெரிய அளவு முன்னேற்றத்தை கண்டு வருகிறது.

இந்திய விமான நிறுவனங்கள், புதிதாக பல விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை செய்து வருகின்றன. இதற்கேற்ப, விமான நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இருக்கும் விமான நிலையங்களை விரிவுபடுத்த வேண்டும்.

இதைத் தவிர, அடுத்த, 20 ஆண்டுகளில், 31 ஆயிரம் விமானிகள், 26 ஆயிரம் மெக்கானிக்குகள், இந்தியாவுக்கு தேவைப்படுவர். இதை பூர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மும்பை, 'இந்தியாவுக்கு அடுத்த 20 ஆண்டுகளில், 31 ஆயிரம் விமானிகள், 26 ஆயிரம் மெக்கானிக்குகள் தேவைப்படுவர்' என, போயிங் இந்தியா தலைவர் சலீல் குப்தா குறிப்பிட்டார்.அமெரிக்காவைச் சேர்ந்த,

கனவு இல்லம் வாங்குவது என்பது ஒவ்வொருவரின் வாழ்நாள் ஆசை. அந்த ஆசை நிறைவேற, மக்கள் கடினமாக உழைத்து பணத்தைச்சேமித்து வைப்பார்கள்.

மூலக்கதை