கேரளாவில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

தினகரன்  தினகரன்
கேரளாவில் இன்று முதல் மின் கட்டணம் உயர்வு

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த கோடை காலத்தில் மின் தேவை அதிகமானதை தொடர்ந்து வெளியில் இருந்து மின்சாரம் வாங்கப் பட்டது. இதன் மூலம் கேரள மின்வாரியத்துக்கு கூடுதலாக ரூ.88 கோடி செலவானது. இதை ஈடுகட்டுவதற்காக மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என அரசிடம் மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையம் கோரிக்கை விடுத்தது. அதற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு யூனிட்டுக்கு 9 காசுகள் உயர்த்த தீர்மானிக்கப்பட்டு இன்று முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

மூலக்கதை