தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது

தினகரன்  தினகரன்
தங்கம் விலை சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்குகிறது

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில் தற்போது, சவரன் ரூ.43 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.  இது நகை வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தங்கம் விலை கடந்த மாதம் இறுதி வாரத்தில் இருந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த நிலையில் கடந்த 13ம் தேதி தங்கம் விலை 1 கிராம் ரூ.5,250க்கும், சவரன் ரூ.42,000க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் மீண்டும் தங்கம் விலை சவரன் ரூ.42 ஆயிரத்தை தொட்டது. 14ம் தேதி அன்று சவரன் ரூ.42,368 அளவில் விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலையில் ஏற்றதாழ்வு நிலவிக் கொண்டே இருந்தது. இந்த நிலையில் நேற்று மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,355க்கும், சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ஒரு சவரன் ரூ.42,840க்கும் விற்கப்பட்டது. அதே நேரத்தில் தங்கம் விலை ரூ.43 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. தங்கம் விலை அதிகரித்து வருவது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இம்மாதத்தில் திருமண முகூர்த்தம் உள்ளிட்ட விஷேச தினங்கள் வருகிறது. இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்வு நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக நகை வாங்குவோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை