பஞ்சாப் பாடகர் சித்து மூசேவாலா கொலை: முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் உறுதி செய்துள்ளார்.
பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூசா கிராமத்தை சேர்ந்த பாடகரான சித்துமூசேவாலா கடந்த மே 29 ம் தேதி மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதற்கு கனடாவை சேர்ந்த முக்கிய ரவுடி கோல்டி பிரார் பொறுப்றே்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு கொலையில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
.
பல்வேறு பயங்கரவாத குழுக்களுடன் கோல்டி பிரார் மற்றும் லாரன்சுக்கு தொடர்பு உள்ளதால், இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால், நெருக்கடி ஏற்பட்டதை தொடர்ந்து கோல்டி பிரார் அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு கலிபோர்னியாவின் பிரெஸ்னோ நகரம், பிரஜோ மற்றும் சால்ட் லேக் உள்ளிட்ட பகுதிகளில் மாறி மாறி சென்றார்.
இந்நிலையில் கோல்டி பிரார், நவ.,20ல் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்த தகவல்கள் இந்திய உளவுத்துறையான 'ரா', டில்லி உளவுப்பிரிவு போலீசார் மற்றும் பஞ்சாப் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது. கோல்டி பிரார் கைது செய்யப்பட்டுள்ளதை பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானும் உறுதி செய்துள்ளார்.
வாஷிங்டன்: பஞ்சாபில் பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை