இஸ்ரோவில் உளவு பார்த்த 4 விஞ்ஞானிகளுக்கு முன்ஜாமினை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
இஸ்ரோவில் உளவு பார்த்த 4 விஞ்ஞானிகளுக்கு முன்ஜாமினை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்

டெல்லி: இஸ்ரோவில் உளவு பார்த்தாக விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது பொய் வழக்கு போட்டது தொடர்பான வழக்கில் 4 பேருக்கு முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. முன்னாள் டிஜிபி உள்பட 4 பேருக்கு முன்ஜாமின் வழங்கி கேரளா ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு போட்டது தொடர்பாக முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் மற்றும் காவல் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார், கேரளா காவல் அதிகாரிகள் விஜயன், துர்கா தத், ஜெய்பிரகாஷ்க்கு முன் ஜாமின் ஐகோர்ட் வழங்கியது. 4 பேருக்கு முன்ஜாமின் வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ  மேல்முறையிடு செய்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு 4 பேருக்கு ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்தது. 4 பேரின் முன்ஜாமின் மனுக்களை மீண்டும் 5 வாரத்திற்குள் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஐகோர்ட்க்கு உச்சநீதிமன்றம் அறிவியுறுத்தியுள்ளது.  இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் உளவு பார்த்ததாக கேரள விஞ்ஞானி நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட அவர், எந்தஆதாரமும் இல்லை என்றுநிரூபிக்கப்பட்டதால் விடுவிக்கப்பட்டார். அவருக்கு நிவாரண நிதி வழங்க கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இஸ்ரோவில் உளவு பார்த்த வழக்கில் மாலத்தீவை சேர்ந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டு கடந்த 1994-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் தற்போது திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சிபி மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது. இந்த வழக்கில் போலீஸார் எங்களை வேண்டுமென்றே சிக்க வைத்து சித்ரவதை செய்தார்கள். போலீஸாரால் 3 ஆண்டுகள் கேரள சிறையில் சித்ரவதை அனுபவித்தோம். சிபி மேத்யூ மனு மீது நீதிமன்றம் முடிவு எடுப்பதற்கு முன்னர், எங்கள் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளனர். சிபி மேத்யூவுக்கு முன்ஜாமீன் வழங்க கூடாது என்று நம்பி நாராயணனும் கூறியுள்ளார்.

மூலக்கதை