தமிழகம், புதுச்சேரியில் டிச.,8ம் தேதி புயல் மழை!

தினமலர்  தினமலர்
தமிழகம், புதுச்சேரியில் டிச.,8ம் தேதி புயல் மழை!

சென்னை: 'வங்கக் கடலில், 5ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். டிச., 8ல் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியை நெருங்கும் வாய்ப்புள்ளது. அதையொட்டி, கன மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்காலிலும், நேற்று காலை வரை, மிதமான மழை பெய்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக, நாகை மாவட்டம் கோடியக்கரையில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது.

வேதாரண்யம், 5; சிதம்பரம், ஆலங்குடி, மதுக்கூர், 3 செ.மீ., மழை பெய்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, வரும் 5ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக காணப்படும். சில இடங்களில் காலை நேரத்தில் பனி மூட்டம் காணப்படும்.

சென்னை: 'வங்கக் கடலில், 5ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். டிச., 8ல் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியை நெருங்கும் வாய்ப்புள்ளது. அதையொட்டி, கன மழை பெய்யலாம் என

மூலக்கதை