பிரதமர் பாதுகாப்பு குளறுபடி புகார்: தமிழக அரசிடம் கவர்னர் விளக்கம் கேட்பு

தினமலர்  தினமலர்
பிரதமர் பாதுகாப்பு குளறுபடி புகார்: தமிழக அரசிடம் கவர்னர் விளக்கம் கேட்பு

சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, கவர்னர் ரவி கடிதம் எழுதி உள்ளார்.

சென்னையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழா, இந்தாண்டு ஜூலை, 28ல் நடந்தது. இதில், பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாகவும், போலீசார் வைத்திருந்த 'மெட்டல் டிடக்டர், டோர் மெட்டல் டிடக்டர்' போன்ற பல கருவிகள் வேலை செய்யவில்லை என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியிருந்தார்.

சென்னை: பிரதமர் மோடி சென்னை வந்தபோது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த புகார் தொடர்பாக, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு, கவர்னர் ரவி கடிதம் எழுதி

மூலக்கதை