ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்

தினகரன்  தினகரன்
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி. சி54 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது: இஸ்ரோ தகவல்

ஆந்திரா: விக்ரம் வரிசையில் \'விக்ரம்-எஸ்\' என்ற நாட்டின் முதல் தனியார் ராக்கெட், 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கடந்த 18-ந் தேதி காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இது ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த ராக்கெட்டை \'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்\' என்ற புத்தொழில் நிறுவனம் (\'ஸ்டார்ட்-அப்\') வடிவமைத்திருந்தது. இந்த நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ, \'பி.எஸ்.எல்.வி.சி-54\' என்ற ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. இந்த ராக்கெட் \'ஓசன்சாட்03\' என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், நாளை 25-11-2022 அன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான \'கவுண்ட் டவுன்\' என்று அழைக்கப்படுகிறது. இறங்குவரிசை ஏற்பாடுகள், இன்று தொடங்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட், 4 நிலைகளைக் கொண்டது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டது. முதல் மற்றும் 3-வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2-வது மற்றும் 4-வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது. பி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டில் இது 56-வது திட்டப்பணியாகும் என்று தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை