சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

தினமலர்  தினமலர்
சீமை கருவேல மரங்களை அகற்ற கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்


சென்னை : சீமை கருவேல மரங்களை அகற்ற, அனைத்து பஞ்சாயத்துகளையும் அறிவுறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை, தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து,

அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.சிறப்பு அமர்வுபின், இந்த வழக்குகள்,வனங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் சதீஷ்குமார், பரத சக்ரவர்த்தி அமர்வில், இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் குறித்து, வனத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர் வளத்துறை சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.நீர் வளத்துறை அறிக்கையில், 'தமிழகம் முழுதும், 4.90 லட்சம் ஏக்கர் பரப்பு நீர்நிலைகளில், சீமை கருவேல மரங்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.'அவற்றில், 1.75 லட்சம் ஏக்கர் பரப்பில் இருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.




மீதியை படிப்படியாக அகற்ற டெண்டர் கோரப்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சித் துறை அறிக்கையில், 'கிராமப்புறங்களில், 6,750 ஏக்கரில் இருந்த சீமை கருவேல மரங்கள், 4.74 கோடி ரூபாய் செலவில் அகற்றப்பட்டுள்ளன' என்று கூறப்பட்டுள்ளது.டெண்டர்வனத் துறை அறிக்கையில், முதுமலை மற்றும் ஆனைமலை வனப் பகுதிகளில், 500 ஏக்கர் பரப்பில் வளர்ந்திருந்த கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.அறிக்கைகளை பதிவு செய்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

நீர்நிலைகளில் உள்ள சீமை கருவேல மரங்களை படிப்படியாக அல்லாமல், மொத்தமாக அகற்ற வேண்டும். இதுகுறித்த டெண்டர் நடைமுறைகளை, மூன்று மாதங்களில் முடிக்க வேண்டும்.சீமை கருவேல மரங்களை அகற்றும்படி, தமிழகம் முழுதும் உள்ள பஞ்சாயத்துக்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். அதுகுறித்து மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அகற்றப்பட்ட கருவேல மரங்களை ஏலம் விட, பஞ்சாயத்துக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். கருவேல மரங்களை அகற்றிய இடங்களில், நாட்டு மரங்களை நட வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விசாரணையை நவம்பர் 2க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

சென்னை : சீமை கருவேல மரங்களை அகற்ற, அனைத்து பஞ்சாயத்துகளையும் அறிவுறுத்தும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுதும் சீமை கருவேல மரங்களை

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை