பூமி பூஜையை அவமதித்தாரா தர்மபுரி தி.மு.க., எம்.பி.,?

தினமலர்  தினமலர்
பூமி பூஜையை அவமதித்தாரா தர்மபுரி தி.மு.க., எம்.பி.,?


தர்மபுரி :தர்மபுரி அருகே நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பூஜையில் இருந்த செங்கற்களை எட்டி உதைத்து அவமதித்ததாக தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்ட வளாகத்தில், மாவட்ட பஞ்., நிதி, 49 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய நுாலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது.அப்போது அங்கு வந்த தர்மபுரி தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார் பூமி பூஜை செய்ய மஞ்சள், குங்குமம் பூசி வைத்திருந்த செங்கற்களை எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது.



பின்னர், அதே செங்கல்லை எடுத்து வைத்து, பணியை துவக்கி வைத்ததாக கூறப்பட்டது.பின், கோபத்தில் காரில் ஏறிய எம்.பி., செந்தில்குமார், இப்பணியை மேற்கொள்ளும் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் சண்முகம் மற்றும் அதிகாரிகளை அழைத்து, 'உங்களுக்கு ஒரு முறை, இருமுறை சொல்லலாம். ஒவ்வொரு முறையுமா வந்து, பிரச்னை பண்ண வேண்டுமா,'' எனக்கேட்டு, புறப்பட்டார்.

நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய தி.மு.க., அவைத்தலைவர் வீரமணி கூறியதாவது:பூமி பூஜைக்காக செங்கலுக்கு மஞ்சள், குங்குமத்தில் பொட்டு வைத்திருந்தனர். அதை எம்.பி., செந்தில்குமார் காலால் எட்டி உதைத்தார். அதன் பின் பூஜை செய்யக்கூடாது என்றதுடன், மீண்டும் கல்லை துாக்கி வைத்து விட்டு சென்றார். ஒன்றிய செயலர் சண்முகத்தை கூப்பிட்டு, 'இதுபோன்று பொட்டு வைக்கக்கூடாது; வேலையை ரத்து செய்து விடுவேன்' என, மிரட்டினார். இதனால், தி.மு.க.,வினரான நாங்கள், எம்.பி., செந்தில் குமாருக்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
ஜூலை 16ல் தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரி புனரமைப்பு பணி பூமி பூஜைக்கு செந்தில்குமார் எதிர்ப்பு தெரிவித்ததால், பல தரப்பினர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று, அதியமான்கோட்டத்தில் நடந்த நுாலக பூமி பூஜையின்போது, செங் கற்களை எட்டி உதைத்ததாக, தி.மு.க.,வினரே அவருக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர்.

'நான் எட்டி உதைக்கவில்லை!'

எம்.பி., செந்தில்குமார் கூறியதாவது:பூமி பூஜைக்கு என்னை அழைத்தபோதே, மதம் தொடர்பான நிகழ்வுகள் இருக்கக்கூடாது என, அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் ஒப்புக்கொண்டனர். ஆனால், பூஜைக்கு வைத்திருந்த செங்கல்லில் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டிருந்தது. ஆனாலும், விழாவில் அவற்றை எடுத்து வைத்து பணியை துவக்கி வைத்தேன்.அதன் பிறகே அதிகாரிகள், ஒன்றிய செயலரிடம், அரசு விழாக்களில் ஒரு மதம் சார்பாக இருந்தால், என்னை அழைக்க வேண்டாம் எனக் கூறினேன். நான் செங்கற்களை எட்டி உதைக்கவில்லை. வேண்டுமென்றே சிலர், இதுபோன்ற வதந்திகளை பரப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

தர்மபுரி :தர்மபுரி அருகே நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.பி., செந்தில்குமார், பூஜையில் இருந்த செங்கற்களை எட்டி உதைத்து அவமதித்ததாக தி.மு.க.,வினர் கண்டனம்

சமரசத்துக்கு இடமளிக்காமல்... அதிகாரத்துக்கு அடிபணியாமல்... நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்...

ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.

நன்றி. தினமலர்

இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.

You’ll usually find this icon in the upper right-hand corner of your screen. You may have more than one ad blocker installed.

You may have to select a menu option or click a button.

மூலக்கதை