குமார் மங்கலம் பிர்லா தலைவர் பதவியிலிருந்து விலகல்.. என்ன தான் நடக்கிறது வோடபோனில்..?
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் வோடபோன் பங்குகளை அரசிடம் ஒப்படைக்க தயாராக உள்ளதாக ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா கூறியிருந்தார். இதுவே தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது குமார் மங்கலம் பிர்லா வோடபோன் ஐடியாவின் நிர்வாகமற்ற இயக்குனர் குழு மற்றும் நிர்வாகமற்ற தலைவர்