வெண்கலம் வென்றார் லவ்லினா: குத்துச்சண்டையில் ஆறுதல்

தினமலர்  தினமலர்
வெண்கலம் வென்றார் லவ்லினா: குத்துச்சண்டையில் ஆறுதல்

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா (69 கி.கி.,) வெண்கலப் பதக்கம் வென்றார். அரையிறுதியில் 0-5 என, துருக்கி வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.

ஜப்பானில் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் பெண்களுக்கான குத்துச்சண்டை 'வெல்டர் வெயிட்' எடைப் பிரிவு (69 கிலோ) அரையிறுதியில் இந்தியாவின் லவ்லினா, நடப்பு உலக சாம்பியன் துருக்கியின் புசனெஸ் சர்மெனெலி மோதினர். இதில் லவ்லினா 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இது, டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு கிடைத்த 3வது பதக்கமானது. ஏற்கனவே பளுதுாக்குதலில் மீராபாய் சானு (வெள்ளி), பாட்மின்டனில் சிந்து (வெண்கலம்) பதக்கம் வென்றிருந்தனர்.

மூலக்கதை