திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக புகார்

தினகரன்  தினகரன்
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தவறான ஊசியால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக புகார்  எழுந்துள்ளது. செவிலியர் தவறான ஊசி போட்டதால்தான் கர்ப்பிணி பெண் வனிதா(26) உயிரிழந்தார் என உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கர்ப்பிணி பெண்ணின் உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்து தவறான ஊசி செலுத்திய செவிலியரை சஸ்பெண்ட் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை