ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் பட்டியலை அனுப்ப மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்
டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்களின் பட்டியல் அடங்கிய விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு ஏற்படவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.