கோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை

தினமலர்  தினமலர்
கோவாக்சின் கிளினிக்கல் பரிசோதனைக்கு அனுமதி ரத்து: பிரேசில் அரசு நடவடிக்கை

பிரேசிலியா: பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்சா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன், இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் மருந்தை வினியோகம் செய்ய ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், 2 கோடி கோவாக்சின் மருந்து சப்ளை செய்வது தொடர்பாக பிரேசில் நிறுவனத்துடன் 32.4 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பாரத் பயோடெக் நிறுவனத்துடனான 32.4 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை பிரேசில் அரசு ரத்து செய்தது.


இதனால், அதிருப்தியில் இருந்த பாரத் பயோடெக் நிறுவனம், பிரேசிலின் பெர்சியா மெடிகாமென்டோஸ் மற்றும் என்விக்ஸா பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் செய்திருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நேற்று திடீரென ரத்து செய்தது.

இந்நிலையில் பிரசேலின் மருத்துவக் கட்டுப்பாட்டு அமைப்பான அன்விசா இன்று வெளியிட்ட அறிக்கையில், 'பிரேசிலில் கோவாக்சின் தடுப்பூசியின் கிளினிக்கல் பரிசோதனை சஸ்பெண்ட் செய்யப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


பிரேசிலில் உள்ள பெர்சியா மெடிகாமென்டோஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட உடன், கிளினிக்கல் பரிசோதனைக்கான அனுமதியும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மறுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை