இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,383 பேர் பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு, 38,652 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

தினகரன்  தினகரன்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 41,383 பேர் பாதிப்பு, 507 பேர் உயிரிழப்பு, 38,652 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.18 லட்சத்தை தாண்டியுள்ளது. அதே போல், இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.12 கோடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 41,383 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,12,57,720 ஆக உயர்ந்தது.* புதிதாக 507 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,18,987 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 38,652 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,04,29,339 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 4,09,394 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 41,78,51,151 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூலக்கதை