டி20 தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

தினகரன்  தினகரன்
டி20 தொடர்; பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து

மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானும், 2வது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என சமனிலை பெற்றது. இந்நிலையில், 3வது போட்டி மான்செஸ்டரில் நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.  இதையடுத்து, இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் அதிரடியாக ஆடினார்.அவர், 36 பந்துகளில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 64 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டேவிட் மலான் 31 ரன்னும், ஜோஸ் பட்லர், மார்கன் தலா 21 ரன்னும் எடுத்தனர். இறுதியில், இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகன் விருது ஜேசன் ராய்க்கும், தொடர் நாயகன் விருது லிவிங்ஸ்டோனுக்கும் வழங்கப்பட்டது.

மூலக்கதை