ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

தினகரன்  தினகரன்
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு சச்சின் வாழ்த்து

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் 23ஆம் தேதி ஒலிம்பிக் போட்டி கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் வாழ்த்தி பேசியுள்ள வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், “ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ள நீங்கள் அதற்குத் தயாராக இருப்பீர்கள் என்று தெரியும். நாட்டு மக்கள் அனைவரும் அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.சச்சினுக்கு முன்பாக, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ் ஆகியோரின் வாழ்த்து வீடியோக்களை இந்திய கிரிக்கெட் வாரியம் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஒலிம்பிக் போட்டியில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் இந்தியா சார்பாக கொடியை ஏந்தி வழிநடத்திச் செல்வார்கள்.

மூலக்கதை