கேரளாவில் தொற்று திடீர் அதிகரிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கேரளாவில் தொற்று திடீர் அதிகரிப்பு

புதுடெல்லி: கொரோனா 2வது அலை பாதிப்புகள் தற்போது மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. ஆனால், நேற்றை கொரோனா பாதிப்பை விட இன்று 7. 4 சதவீதம் உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 157 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 11 லட்சத்து 6 ஆயிரத்து 65 உயர்ந்துள்ளது.

ஒரேநாளில் மேலும் 518 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,609 ஆக உயர்ந்துள்ளது.



உயிரிழப்பு விகிதம் 1. 33 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 42,004 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 796 ஆக உள்ளது. குணமடைவோர் விகிதம் 97. 31 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் தொற்று காரணமாக தற்போது வரை 4,22,660 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 40,49,31,715 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி தொற்று பாதிப்பில் கேரளாவில் 16,150, மகாராஷ்டிரா 8,170, ஆந்திராவில் 2,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கையில், மகாராஷ்டிராவில் 124 பேர், கேரளாவில் 114, ஒடிசாவில் 67 பேர் அதிகபட்சமாக இறந்துள்ளனர்.

கிட்டதிட்ட 40 நாட்களுக்கு பின் கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால், அம்மாநிலத்தில் கொரோனா மூன்றாவது அலை பரவுகிறதா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது.


.

மூலக்கதை