‘குரோபர்ஸ்’ இணை நிறுவனர் நிறுவனத்திலிருந்து விலகுகிறார்

தினமலர்  தினமலர்
‘குரோபர்ஸ்’ இணை நிறுவனர் நிறுவனத்திலிருந்து விலகுகிறார்

புதுடில்லி:‘ஆன்லைன்’ மளிகை பொருட்கள் வினியோக நிறுவனமான, ‘குரோபர்ஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனர் சவுரப் குமார், அந்நிறுவனத்திலிருந்து வெளியேற முடிவெடுத்து உள்ளார்.

நிறுவனத்திலிருந்து சவுரப் குமார் வெளியேற முடிவு செய்துள்ளதாகவும்; அதேசமயம் இயக்குனர் குழுவில் தொடர்ந்து அங்கம் வகிக்க இருப்பதாகவும்; பங்குதாரராக நீடிப்பதாகவும், தலைமை செயல் அதிகாரி அல்பிந்தர் தின்ஷா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் இது குறித்து தெரிவித்துள்ள தாவது:நானும், சவுரப் குமாரும் கடந்த எட்டு ஆண்டுகளாக சேர்ந்து பணியாற்றி உள்ளோம். அவர் வேறு சவால்களை நோக்கி செல்கிறார். அதனால், இனி அவர் அன்றாட பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்.குரோபர்ஸ் நிறுவனத்தின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை