கொரோனா தொற்று பாதிப்பால் ‘பறக்கும் வீரர்’ மில்கா சிங் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா தொற்று பாதிப்பால் ‘பறக்கும் வீரர்’ மில்கா சிங் மரணம்

சண்டிகர்: முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் (91), கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்த மாத தொடக்கத்தில் மில்கா சிங்குக்கு திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் சண்டிகரில் உள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மில்கா சிங் நேற்று இரவு 11. 30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



புகழ்பெற்ற பறக்கும் வீரர் என்று அழைக்கப்படும் ‘ஸ்ப்ரிண்டர்’ மில்கா சிங்கின் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘தேசத்தின் கற்பனையை கைப்பற்றிய மற்றும் இந்தியர்களின் இதயங்களில் சிறப்பு இடத்தைப் பெற்ற ஒரு மகத்தான விளையாட்டு வீரரை நாங்கள் இழந்துவிட்டோம்.   விளையாட்டில் அவரது எழுச்சியூட்டும் ஆளுமை மில்லியன் கணக்கானவர்களுக்கு தன்னையும் நேசிக்க வைத்தது’ என்று கூறியுள்ளார்.

.

மூலக்கதை