ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

தினமலர்  தினமலர்
ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த திட்டம்

புதுடில்லி:பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கூடும் என தெரிகிறது.

பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., ஆகியவை கடும் நஷ்டங்களை சந்தித்ததை அடுத்து, ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் விதமாக விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டது.இதற்காக, கடந்த 2020 -– 2021 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் 37 ஆயிரத்து 268 கோடி ரூபாய், விருப்ப ஓய்வு திட்டத்துக்காக ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் 50 சதவீதம் பேரும், எம்.டி.என்.எல்., நிறுவனத்தில் 80 சதவீதம் பேரும் விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தெரிவித்தனர்.இதையடுத்து, 93 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமானவர்களாக ஏற்கப்பட்டது.இந்நிலையில், தற்போது இந்நிறுவனங்களில் கடுமையான ஆள் பற்றாக்குறை நிலவுகிறது.

இதையடுத்து, தொலைதொடர்பு அமைச்சகம், விருப்ப ஓய்வு திட்டத்துக்கு பொருத்தமான ஊழியர்களை, மீண்டும் ஆலோசகர்கள் பெயரில் பணியமர்த்த முடியுமா என, குறிப்பிட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூலக்கதை