முன்னாள் தடகள வீரரான பறக்கும் சீக்கியர் மில்காசிங் காலமானார்

தினமலர்  தினமலர்
முன்னாள் தடகள வீரரான பறக்கும் சீக்கியர் மில்காசிங் காலமானார்


சண்டிகர்: கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் தடகள வீரரும், பறக்கும் சீக்கிய என பெயர் பெற்றவருமான மில்கா சிங், 90 காலமானார்.

ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகளில் நம் நாட்டுக்கு பல்வேறு பதக்கங்களை பெற்றுத் தந்து இந்தியாவிற்கு பெருமை சேர்ந்தவர் முன்னாள் வீரர் மில்கா சிங், 90.

மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் "பறக்கும் சீக்கியர்' என அழைக்கப்பட்டார். கடந்த மே மாதம் கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து ஜூனில் உடல் பரிசோதனை செய்ததில், கொரோனா தொற்று உறுதியானது. சண்டிகரில் உள்ள மருத்துவமனையின் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மில்காசிங் மறைவுக்கு பஞ்சாப், அரியானா மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு விளையாட்டு பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை