பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியான 5-வது விவாடெக் டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை

தினகரன்  தினகரன்
பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியான 5வது விவாடெக் டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரை

டெல்லி: பாரிஸில் நடைபெறும் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-வது  நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும். இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி உரை நிகழ்த்துகிறார். விவாடெக் என்பது 2016-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பாரிஸ் நகரத்தில் நடைபெறும் ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் மற்றும் புதுமை நிறுவனங்களின் நிகழ்ச்சியாகும்.  பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், ஸ்பெயின் பிரதமர் திரு பெட்ரோ சான்சே, பல்வேறு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான டிம் குக், பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக அதிகாரியுமான மார்க் ஜுகர்பெர்க், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அதிபர் பிராட் ஸ்மித் போன்ற பெரு நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 

மூலக்கதை