பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்.,

தினமலர்  தினமலர்
பங்குச் சந்தை வளர்ச்சியால் ஜொலிக்காத தங்க இ.டி.எப்.,

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, 57 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மே மாதத்தில், 288 கோடி ரூபாய் அளவுக்கே, தங்க இ.டி.எப்.,களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும்; இது, இதற்கு முந்தைய ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிட்டால், 57 சதவீத சரிவாகும் என்றும், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பான, ‘ஆம்பி’ தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரலில், இத்திட்டங்களில் மொத்தம், 680 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் முதலீடு குறைந்த போதிலும்; தங்க இ.டி.எப்., பண்டுகள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பு, 16 ஆயிரத்து, 625 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த ஏப்ரலில் இது, 15 ஆயிரத்து, 629 கோடி ரூபாயாக இருந்தது. தங்க இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு சரிந்ததற்கு காரணம், பங்குச் சந்தைகள் சிறப்பாக செயல்படுவதால், முதலீட்டாளர்கள் பார்வை சந்தை பக்கம் திரும்பி இருக்கக்கூடும் என்றனர், சந்தை நிபுணர்கள்.

மூலக்கதை