ஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’: பிரதமர் மோடி பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜி7 உச்சி மாநாட்டில் ‘ஒரே பூமி; ஒரே ஆரோக்கியம்’: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: கொரோனா நோய்த்தொற்றை திறம்பட எதிா்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ள ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு பிரிட்டனில் உள்ள கார்ன்வால் நகரில் நடைபெறுகிறது.

இந்மாநாட்டில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா நாடுகள் கலந்துகொள்ள சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று மாநாட்டில் பிரதமா் மோடி காணொலி வழியாக பேசுகையில், ‘கொரோனா தொற்றை ஒட்டுமொத்த சமூகமாக இணைந்து இந்தியா எதிர்கொண்டது.

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறியவும், தடுப்பூசிகளை நிா்வகிக்கும் பணியிலும் டிஜிட்டல் உபகரணங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தியது.

உலக அளவில் சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும். எதிர்காலத்தில் நோய்த்தொற்றுகள் ஏற்படுவதை தடுக்க உலகளாவிய ஒற்றுமை அவசியம் தேவை.

கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள ‘ஒரு பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற அணுகுமுறை கடைபிடிக்கப்பட வேண்டும். இதுதான், ஒட்டுமொத்த உலகுக்கும் இந்தியாவின் செய்தியாகும்.

கொரோனா மருந்துகளுக்கான காப்புரிமையை தற்காலிகமாக ரத்து செய்தல் மற்றும் பரவலை தடுத்து சிகிச்சையளிக்க தேவைப்படும் தொழில்நுட்பங்களுக்கு வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகளுக்கான ஒப்பந்தத்தில் (டிரிப்ஸ்) இருந்து விலக்களிக்க உலக வா்த்தக அமைப்பிடம் இந்தியாவும், தென் ஆப்பிரிக்கா பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளுக்கு ஜி7 நாடுகள் ஆதரவளிக்க வேண்டும்’ என்று பேசினார்.


.

மூலக்கதை