இளம்பெண் மரணம் தொடர்பான வழக்கு: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட் உத்தரவு
சென்னை: இளம்பெண் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணத்திற்கு வற்புறுத்தியதால் அலுவலகத்தில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் இந்த ஆணையை பிறப்பித்துள்ளது.