நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள்

தினமலர்  தினமலர்
நெருக்கடியை சமாளிக்க ‘கோவிட்’ பத்திரங்கள்

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு, ஊக்கச் சலுகைகளை வழங்குவதற்கு தேவையான நிதியை, ‘கோவிட்’ பத்திரங்களை வெளியிட்டு திரட்டலாம் என, பி.எச்.டி.சி.சி.ஐ., எனும், ‘பி.எச்.டி., சேம்பர் ஆப் காமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரி’ அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது:கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்குகள், வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்கு சவாலான ஒன்றாக அமைந்துள்ளன. இந்நிலையில், அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது.

பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையிலான ஊக்க திட்டங்களை அரசு அறிவிப்பதற்கு, அதற்கு போதுமான நிதியாதாரம் தேவைப்படுகிறது. இந்நிலையில், கோவிட் பத்திரங்களை வெளியிட்டு, தேவையான நிதியை பெற அரசு முயற்சிக்கலாம். பல்வேறு அரசாங்கங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் இது போன்ற சிறப்பு பத்திர வெளியீட்டை மேற்கொண்டு, தேவையான நிதியை திரட்டிக் கொள்வதும்; விரைவில் சிக்கலான நிலையிலிருந்து மீள முயற்சிப்பதும் வழக்கமான முயற்சிகளில் ஒன்று தான்.இவ்வாறு தெரிவித்துள்ளது.

மூலக்கதை