2022-ம் ஆண்டு பத்ம விருது; செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்: மத்திய அமைச்சகம்

தினகரன்  தினகரன்
2022ம் ஆண்டு பத்ம விருது; செப்டம்பர் 15ம் தேதிக்குள் விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்: மத்திய அமைச்சகம்

டெல்லி: 2022-ம் ஆண்டு வழங்கப்பட உள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் உள்ளன. இவை பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாசாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிந்துரை தொடர்பான சந்தேகங்கள் குறித்து www.mha.gov.in என்ற இணைதள முகவரியில் நிவர்த்தி செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2022-ம் ஆண்டு குடியரசு தினத்தின் போது பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளன.

மூலக்கதை