4-வது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 91.702 பேர் பாதிப்பு; 3,403 பேர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
4வது நாளாக 1 லட்சத்துக்கு கீழ் சென்ற கொரோனா பாதிப்பு; 24 மணி நேரத்தில் 91.702 பேர் பாதிப்பு; 3,403 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேலும் 3,403 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:* புதிதாக  91.702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2,92,74,823 ஆக உயர்ந்தது.* புதிதாக  3,403 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,63,079 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,34,580 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம் நாட்டின் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 2,77,90,073 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11,21,671 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* நாட்டின் இதுவரை 24,60,85,649 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூலக்கதை