இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

FILMI STREET  FILMI STREET
இண்டர்நெட் யூஸ் பண்ணாதவங்க உயிர் வாழ வேண்டாமா.? மோடிக்கு ராகுல் சரியான கேள்வி

18 வயது முதல் 45 வயதுக்குள் உட்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

பொதுமக்கள் பலரும் முன் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர்.

கிராமப்புற மற்றும் நகரப்புறங்களிலும் கூட இண்டர்நெட் பயன்படுத்தாதவர்கள் ஆண்ட்ராய்டு போன் இல்லாதவர்கள் பலர் உள்ளனர்.

இதை எல்லாம் குறித்து கவலைப்படாத புரிந்துக் கொள்ளாத அரசாங்கம் COWIN இணைய தளத்தில் பதிவு செய்தால் மட்டுமே தடுப்பூசி போடப்படும் என உத்தரவிட்டுள்ளது்

இதுகுறித்து ராகுல் காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில்..

“தடுப்பூசிக்கு இணையதளப் பதிவு தேவையற்றது. இணையதளத்தை அணுக முடியாதவர்களுக்கும் உயிர் வாழ்வதற்கான உரிமை உள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் இணையதளப் பதிவைக் கட்டாயமாக்கக் கூடாது. தடுப்பூசி மையம் வரும் அனைத்து மக்களுக்கும் கோவிட் தடுப்பூசி செலுத்த வேண்டும்.”

இவ்வாறு ராகுல் காந்தி மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

Rahul Gandhi slams PM Modi

மூலக்கதை