24 ஆயிரம் ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்த நுண் விலங்கு

தினமலர்  தினமலர்
24 ஆயிரம் ஆண்டுக்கு பின் உயிர்த்தெழுந்த நுண் விலங்கு

மாஸ்கோ:ரஷ்யாவில், 24 ஆயிரம் ஆண்டுகளாக பனியில் உறைந்திருந்த, 'ரோட்டிபர்' என்ற மிக நுண்ணிய விலங்கை, விஞ்ஞானிகள் உயிர்த்தெழ வைத்துள்ளனர்.

ரஷ்யாவின் புஷ்சினோ அறிவியல் மையத்தைச் சேர்ந்த, ஸ்டாஸ் மலாவின் தலைமையிலான குழு, சைபீரியாவில், உறைநிலையில் காணப்படும் அலசியா ஆற்றில், ஆறு ஆண்டுகளாக ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இந்த ஆய்வில், 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பனியில் உறைந்து போன, 'ரோட்டிபர்' எனப்படும், ஒரு மில்லி மீட்டருக்கும் குறைவான புழு போன்ற, மிக நுண்ணிய விலங்கை, விஞ்ஞானிகள் கண்டெடுத்துள்ளனர்.

இது குறித்து ஸ்டாஸ் மலாவின் கூறியதாவது:உறைபனியில், பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது உண்டு. ஆனால் நரம்பு மண்டலம், மூளை உள்ளிட்ட அனைத்து அவையங்களுடன் மிக நுண்ணிய விலங்கான, ரோட்டிபர் கண்டு பிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறை. நீரில் காணப்படும் இந்த வகை ரோடிபர், 23 ஆயிரத்து, 960 முதல், 24 ஆயிரத்து, 485 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய நுண்விலங்கு என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உறைபனியில் இருந்து ரோட்டிபரை எடுத்து, உணவு கொடுத்ததும், அது இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. ரோட்டிபர், பெண் துணையின்றி, இனப் பெருக்கம் செய்யும் வகையைச் சேர்ந்தது. அதனால், உடனே, குட்டிகளை ஈனத் துவங்கி விட்டது. இந்த கண்டுபிடிப்பு, விலங்கியல் அறிவியல் ஆய்வில் புதிய சகாப்தத்தை தோற்றுவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை