இப்போ தான் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது.. அதுக்குள்ள இப்படி ஆகிடுச்சே.. சோகத்தில் புலம்பும் சிரிப்பழகி!
சென்னை: சில படங்களிலும் நடித்திருந்தாலும் பெரிய அளவுக்கு அந்த நடிகைக்கு அங்கீகாரமே கிடைக்கவில்லை. இந்நிலையில், திடீரென சின்னத்திரை பக்கம் ஒதுங்கிய அவர் மக்கள் அன்பை பெற்று பிரபலமானார். ரியாலிட்டி ஷோவில் கலக்கிய அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனால், கொரோனா பரவலால் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், மீண்டும் தனது வளர்ச்சி முடக்கப்பட்டுள்ளதே என புலம்பி வருகிறாராம் அந்த சிரிப்பழகி.