சீனாவை மிரட்டும் புயல்கள் 12 பேர் பலி; 250 பேர் காயம்

தினமலர்  தினமலர்
சீனாவை மிரட்டும் புயல்கள் 12 பேர் பலி; 250 பேர் காயம்

பீஜிங் : சீனாவில் வீசிய புயல்களால், கட்டடங்கள் இடிந்து விபத்துக்குள்ளானதில், 12 பேர் உயிரிழந்தனர்; 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

நம் அண்டை நாடான சீனாவின் சில நகரங்களில், நேற்று இரண்டு புயல்கள், பெரும் சேதங்களை ஏற்படுத்தின. கைடியன் மாவட்டத்தில் உள்ள வூஹான் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்றும் வீசுகிறது. இந்த புயலால், 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன. இதைத்தவிர, 130 வீடுகளில் சிறிய அளவிலான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. கட்டட இடிபாடுகளில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மின்கம்பங்கள் சரிந்ததால் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.ஜியாங்சு மாகாணத்தின் ஷூஜோவ் நகரில், இந்த புயலால் 84 வீடுகளும், 17 நிறுவனங்களும் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் இருந்து நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

மூலக்கதை