ஏப்ரல் மாத ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு

தினமலர்  தினமலர்
ஏப்ரல் மாத ஏற்றுமதி மூன்று மடங்கு அதிகரிப்பு

புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரலில், ஏற்றுமதி, 2.24 லட்சம் கோடி ரூபாயாக உயர்வைக் கண்டிருக்கிறது. இது குறித்து, மத்திய வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரலில், நாட்டின் ஏற்றுமதி நவரத்தினங்கள், ஆபரணங்கள் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு ஏப்ரலில், ஏற்றுமதி, 75 ஆயிரத்து, 628 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.

இதற்கு காரணம், அக்காலகட்டத்தில் இருந்த நாடு தழுவிய ஊரடங்காகும்.நடப்பு ஆண்டு ஏப்ரலில் ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையிலும், நாட்டின் வர்த்தக பற்றாக்குறை, 1.10 லட்சம் கோடி ரூபாயாக விரிவடைந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இது, 49 ஆயிரத்து, 348 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது கவனிக்கத்தக்கது.

இறக்குமதியும், கடந்த ஏப்ரலில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மொத்தம், 3.34 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.சதவீத அடிப்படையில் பார்த்தால், கடந்த ஏப்ரலில் ஏற்றுமதி, 195.72 சதவீதமும்; இறக்குமதி 167 சதவீதமும் அதிகரித்துள்ளது.

மூலக்கதை