2வது அலையின் கோர தாண்டவம்: இந்தியாவில் ஒரே நாளில் 4,03,738 பேருக்கு கொரோனா... 4,092 பேர் உயிரிழப்பு !

தினகரன்  தினகரன்
2வது அலையின் கோர தாண்டவம்: இந்தியாவில் ஒரே நாளில் 4,03,738 பேருக்கு கொரோனா... 4,092 பேர் உயிரிழப்பு !

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 4,092  பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 4,03,738 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை  2,22,96,414 ஆக உயர்ந்தது.* புதிதாக 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை  2,42,362  ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,86,444 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  1,83,17,404 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட  37,36,648  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.15% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.76% ஆக அதிகரித்துள்ளது.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 16,94,39,663 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூலக்கதை