கொரோனாசூழலை கருத்தில் கொண்டு 25 மாநிலங்களுக்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

தினகரன்  தினகரன்
கொரோனாசூழலை கருத்தில் கொண்டு 25 மாநிலங்களுக்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் 25 மாநிலங்களுக்கு 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கொரோனாசூழலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி நிதியை  மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களுக்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடியை முதல் தவணையாக ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 15-வது நிதிக்குழுவின் பரிந்துரையின் படி மாநிலங்களுக்கு முதற்கட்டமாக நிதி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதம் ஒதுக்க வேண்டிய நிதியை கொரோனா காரணமாக முன்கூட்டியே விடுவித்ததாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கொரோனா தடுப்புப் பணிகளுக்கு தங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை பல்வேறு மாநிலங்களும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து, கொரோனாவிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிதி மக்களுக்கு சிறந்த முறையில் பயன்படும் என நம்பப்படுகிறது.

மூலக்கதை