ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..!!

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு..!!

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் திறந்துக் கிடந்த 90 அடி ஆழமுள்ள ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.  ஜாலூர் மாவட்டத்தில் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த சிறுவனை 16 மணி நேர போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்டனர். விளையாடும் போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை பத்திரமாக மீட்டதால் உறவினர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜாலூர் மாவட்டத்தில் உள்ள லாச்சரி கிராமத்தில் வசித்து வரும் நாகராம் - தேவசி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் 95 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் இந்த கிணற்றில் அவரது 4 வயது மகனான அனில் தேவசி தவறி விழுந்துவிட்டான். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட்டனர். கிணற்றுக்குள் 90 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் அவனுடன் தொடர்பு கொள்வதற்காக கேமரா ஒன்று உள்ளே இறக்கப்பட்டது. மேலும் சிறுவன் மயக்கம் அடையாமல் இருக்க குழாய் மூலம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. சிறுவனுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வந்தனர். அவனுக்கு உணவும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளான்.

மூலக்கதை