ஏ.கே - 47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி: ரஷ்ய அதிபர்

தினமலர்  தினமலர்
ஏ.கே  47 துப்பாக்கிகளை போல நம்பகமானது ‛ஸ்புட்னிக் லைட் தடுப்பூசி: ரஷ்ய அதிபர்

மெக்சிகோ: கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

உலகையே ஆட்டி படைக்கும் கொரோனா வைரசை தடுக்க உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளன. கொரோனா தொற்றுக்கான உலகின் முதல் தடுப்பூசியை (ஸ்புட்னிக் வி) கண்டுபிடித்த ரஷ்யா, அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள அனைத்து தடுப்பூசிகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். ஆனால், தற்போது ரஷ்யா மற்றுமொரு தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. 79.4 சதவீத செயல்திறனைக் கொண்ட 'ஸ்புட்னிக் லைட்' என்னும் தடுப்பூசி, ஒரு டோஸ் செலுத்திக் கொண்டாலே போதுமானது.


இந்த தடுப்பூசிக்கு ரஷ்ய அரசு அங்கீகாரம் கொடுத்துள்ளது. 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பு மருந்து குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறுகையில், ‛கொரோனாவுக்கு எதிராகப் போராடக்கூடிய 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசி, ஏகே-47 துப்பாக்கிகளைப் போலவே நம்பகமானவை. அனைத்து வகையான கொரோனா உருமாற்ற வகைகளுக்கும் எதிராக இந்த தடுப்பூசி சிறப்பாக வேலை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்,' என்றார். ஏ.கே-47 துப்பாக்கிகள் ரஷ்ய நாட்டின் காப்புரிமை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை