சீனாவின் தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி: உலக சுகாதார அமைப்பு
ஜெனீவா: 'சீனாவின் இரு கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்துவதற்கு விரைவில் அனுமதியளிக்கப்படும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
பைஸர், மாடர்னா, ஸ்புட்னிக், கோவாக்சின், அஸ்ட்ராஜெனிகா ஆகிய தடுப்பூசிகளுக்கு மட்டுமே உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், சீனாவின் கொரோனா தடுப்பூசிகள் அமீரகம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.