ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா.. 3,449 பேர் பலி: 24 மணி நேரமும் எரியூட்டப்படும் சடலங்கள்.. நரகத்தில் இந்திய மக்கள்!!

தினகரன்  தினகரன்
ஒரே நாளில் 3,57,229 பேருக்கு கொரோனா.. 3,449 பேர் பலி: 24 மணி நேரமும் எரியூட்டப்படும் சடலங்கள்.. நரகத்தில் இந்திய மக்கள்!!

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 3,57,229 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,02,82,833 ஆக உயர்ந்தது.* புதிதாக 3,449 பேர் உயிரிழந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,22,408 ஆக உயர்ந்துள்ளது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,20,289 பேர் குணமடைந்துள்ளனர்.* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,66,13,292 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 34,47,133 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 81.91% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.10% ஆக அதிகரித்துள்ளது.* கொரோனாவால் சிகிச்சை வெறுவோர் சதவிகிதம் 17.00% ஆக அதிகரித்துள்ளது.* இதன் மூலம், நாட்டின் இதுவரை 15,89,32,921 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மூலக்கதை