நாட்டை நடுங்க வைக்கும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படத்துவதே ஒரே தீர்வு: ராகுல்காந்தி ட்வீட்

தினகரன்  தினகரன்
நாட்டை நடுங்க வைக்கும் கொரோனா; முழு ஊரடங்கை அமல்படத்துவதே ஒரே தீர்வு: ராகுல்காந்தி ட்வீட்

டெல்லி: கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி என ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருமான உறுதி தட்டத்தை அறிவித்து உரடங்கை அமல்படுத்த வேண்டும் என கூறினார். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததால் கொரோனா பலர் உயிரிழந்து வருகின்றனர் என குற்றம் சாட்டினார். பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் நாடு தழுவிய முழு ஊரடங்கை அமல்படுத்த யோசித்து வரும்  மத்திய அரசு, பாதிக்கப்படும் பகுதிகளில் மட்டும் கடுமையான ஊரடங்கை அமல்படுத்துமாறு மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு தழுவிய முழு ஊரடங்கு ஒன்றே தீர்வு என காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை பாதிப்பு அதிகமாக உள்ளது. நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 கோடியை தாண்டியுள்ளது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் பகுதியளவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

மூலக்கதை